Sunday, March 10, 2013

அங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்


உயிரங்கிகளைப் பாகுபடுத்தலுக்கும் பெயரிடுதலுக்கும் நியம முறைகளைப் பயன்படுத்தல்

பாகுபாடு (Classification )
உயிரங்கிளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் முறையே பாகுபாடு எனப்படும்.
இவை இருவகைப்படும்.
1. செயற்கை முறைப்பாகுபாடு (Artificial Classification)
2. இயற்கை முறைப்பாகுபாடு (Natural Classification)

செயற்கை முறைப்பாகுபாடு (Artificial Classification )


அவதானிக்கக் கூடிய ஒரு/சில,இயல்பு/இயல்புகளின் அடிப்படையில் எளிமையாகவும், இலகுவாகவும் உயிரங்கிகளைப் பாகுபடுத்தும் முறையே செயற்கை முறைப்பாகுபாடு எனப்படும்.

இயற்கை முறைப்பாகுபாடு (Natural Classification)
ஒத்த பல இயல்புகளின் அடிப்படையில் எளிமையாகவும், இலகுவாகவும் உயிரங்கிகளைப் பாகுபடுத்தும் முறையே இயற்கை முறைப்பாகுபாடு எனப்படும்.

இயற்கை முறைப்பாகுபாட்டின் சிறப்பம்சங்கள்
1. உயிரங்கிகளுக்கிடையிலான உண்மையான தொடர்புகளை
   அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
2. உயிர் அங்கிகளின் எல்லா இயல்புகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
3. ஒரே கூட்டத்தில் அடங்கும் உயிரங்கிகள் ஒத்த தன்மைகளில்
    உண்மையான தொடர்புகளைக் கொண்டிருக்கும்.
4. கூர்ப்பு நடைபெற்ற முறையை எடுத்துக் காட்டுவதாக அமையும்.

உயிரங்கிகள் கொண்டுள்ள சிறப்பியல்புகள்
1. வளர்ச்சியும் விருத்தியும்
2. அனுசேபம்
3. உறுத்துணர்ச்சி
4. இனப்பெருக்கம்
5. அசைவு
6. பாரம்பரியம்
7. சுவாசம்
8. கூர்ப்பு
9. ஒழுங்கும் ஒழுங்மைப்பும்

உயிர் அங்கிகளுக்கும் உயிரற்ற அங்கிகளுக்கும் பொதுவான இயல்புகள்
1. வளர்ச்சி   -  அகவளர்ச்சி (உயிர் அங்கிகளின் வளர்ச்சி)
                         -  புறவளர்ச்சி (பாறைகள் வளர்வடைதல்)

2. அசைவு    -  உயிர் அங்கிகள் அசைதல்
                         -  கடலலைகள் அசைதல்

உயிரங்கிகள் பிரதானமாக 3 வகையாகப் பாகுபடுத்தப்படும் அவையாவன
1. தாவரங்கள்
2. விலங்குகள்
3. நுண்ணங்கிகள்


பஞ்ச இராச்சியப்பாகுபாடு
இங்கு அங்கிகள் 5 இராச்சியங்களாகப் பாகுபாடு செய்யப்படும்.
இதுRobert.H.Whittaker இனால் 1969 இல் உருவாக்கப்பட்டது. இங்கு அங்கிகள் பின்வருமாறு பாகுபடுத்தப்படும்.
1. Kingdom :-  Monera/ Prokariyotae
2. Kingdom :-  Protista/ Prototista
3. Kingdom :-  Fungi
4. Kingdom :-  Plantae
5. Kingdom :-  Animalia

ஆட்சிநிரை ஒழுங்கு வரிசை/  பாகுபாட்டின் அலகுகள் ( Taxa of Classification)

Phylum – விலங்குகளுக்கு, Division – தாவரங்களுக்கு
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகப்பெரிய அலகு - இராச்சியம் (Kingdom)
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகச்சிறிய அலகு - இனம் (Species)
இனம் தவிர்ந்த ஏனைய அலகுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை.
நிலத்தில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு யானை ஆகும்.
நீரில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு நீலத்திமிங்கிலம் ஆகும்.
ஆரம்பகாலப்பாகுபாட்டில் வித்துக்களை உருவாக்காத தாவரங்களின் ஓரு பிரிவாக தலோபைற்றா காணப்பட்டது. தற்போது அதில் அடக்கப்பட்ட அல்கா, பக்ற்றீரியா, பங்கசு என்பன புதிய பாகுபாட்டிலே தனித்தனி இராச்சியங் களிலே அடக்கப்பட்டுள்ளன.

தாவரப்பாகுபாட்டுக்கான பிரமாணங்கள்
தாவரங்கள் பொதுவாக ஒன்றையொன்று ஒத்துக் காணப்படுவதில்லை. அவை ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபடுகின்றது. இவ்வாறு பல்வகைமை கொண்ட தாவரங்களுக்கான “இயற்கை முறையான பாகுபாட்டு முறையை” முதன் முதலில் உருவாக்கியவர் கரோலஸ் லீனியஸ் (1707-1778) ஆவார்.
(இவரது காலத்தில் அறியப்பட்ட தாவரங்கள் குறைவாக இருந்தமையால் இப்பாகுபாடும் ஓரளவு செயற்கைத் தன்மையுடையதாகவே காணப்பட்டது.)
1859 இல் சால்ஸ் டார்வினால் வெளியிடப்பட்ட கூர்ப்புக் கொள்கையானது அங்கிகளுக்கிடையிலான கூர்ப்புத்தொடர்புகளையும், கணவரலாற்றுத் தொடர்புகளையும் விளக்கும் இயற்கை முறைப்பாகுபாடு ஆக அமைந்தது.
பூ என்பது இனப்பெருக்கத்துக்கென சிறத்தலடைந்த தாவரப்பகுதி ஆகும்.

பூக்கும் தாவரங்கள் (Flowering Plant)
இத்தாவரங்களில் பூக்கள் மூலம் இலிங்கமுறை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.
இதன் மூலம் உருவாகும் வித்துக்கள் மூடியநிலையில் பழங்களினுள் காணப்படுவதனால் இவை வித்துமூடியுளிகள் (Angiousperm) எனப்படும்.
தாவர இராச்சியத்தில் விருத்தியடைந்த இவை இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
1. ஒருவித்திலைத்தாவரம் (Monocotiladyane)
2. இருவித்திலைத்தாவரம் (Dicotiladyane)
ஒருவித்திலைத்தாவரம் (Monocotiladyane)
1. வித்தினுள் காணப்படும் முளையம் ஒரு வித்திலையைக் கொண்டது.
2. தண்டு கிளைகள் அற்றது.
3. நாருரு வேர்த்தொகுதியைக் கொண்டவை.
4. இலைகள் சமாந்தர நரம்பமைப்பைக் கொண்டவை.
5. பூக்களில் மூன்று or மூன்றின் மடங்கான எண்ணிக்கையில் அல்லிகள்
    காணப்படும்.

இருவித்திலைத்தாவரம் (Dicotiladyane)
1. வித்தினுள் காணப்படும் முளையம் இரு வித்திலைகளைக் கொண்டது.
2. தண்டு கிளை கொண்டது.
3. ஆணி வேர்த்தொகுதி கொண்டவை.
4. இலைகள் வலையுரு  நரம்பமைப்பைக் கொண்டவை.
5. பூக்களில் நான்கு/ஐந்து or அதன் மடங்கு எண்ணிக்கையான அல்லிகள்
    காணப்படும்.

புவியில் தோன்றிய முதலாவது உயிரங்கி இரசாயனப் பிறபோசனையுடைய பக்ற்ரீரியா ஆகும். இது 3.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

பூக்காத தாவரங்கள் (Non Flowering Plant)
பூக்களை உருவாக்காத தாவரங்கள் ஆகும். இவை இனப்பெருக்கத்தின் அடிப்படையில் இரு வகைப்படும்.
1. வித்துக்களை உருவாக்கும் தாவரங்கள்
2. வித்துக்களை உருவாக்காத தாவரங்கள்

வித்துக்களை உருவாக்கும் தாவரங்கள்
வித்துக்கள் திறந்த நிலையில் காணப்படும். வித்துமூடியிலிகள் (Gymniousperm) எனப்படும்.
ஓரிலிங்கத்துக்குரியனவாகக் காணப்படும். (ஈரில்லமுடையது) ஆண், பெண் என இரு தாவரங்கள் காணப்படும்.
விருத்தியடைந்த கலன் தாவரங்களாகும்.

Eg:-  Cycas (மடுப்பனை) 

வித்துக்களை உருவாக்காத தாவரங்கள்
இவை Bryophyta, Pteridophyta, Lycophyta என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
இவை வித்திகள் மூலம் இனப்பெருக்கும்.

வித்துக்களை உருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் அற்றவை (Bryophyta)
ஈரலுருத்தாவரங்களும் மெய்ப்பாசிகளும் இதிலடங்கும்.
பிரிவிலி உடல் அமைப்புடையது.
பிரிவிலி எனப்படுவது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் அற்ற தாவர உடல்கள் ஆகும். சிலவற்றில் வேர்ப்போலிகள், இலை போன்ற அமைப்புக்கள் ஆகியன காணப்படும்.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ், உரியம் போன்றவை காணப்படுவதில்லை.
நிழலுள்ள ஈரலிப்பான தரையில் வளரும்.
Eg:-  மார்க்கான்சியா (ஈரலுருத்தாவரம்)
போகனேற்றம் (மெய்ப்பாசி)

வித்துக்களை உருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் கொண்டவை (Pteridophyta)
பன்னங்கள் இதிலடங்கும்.
உடலானது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் என வியத்தமடைந்து காணப்படுகின்றது.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ்,உரியம் போன்றவை விருத்தியடைந்து காணப்படும்.
Eg:- நெப்ரோலோபிஸ் (பன்னத்தாவரம்)


வித்துக்களைஉருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் கொண்டவை      
                                                                     (Lycophyta)
கூம்பி எனும் அமைப்பு காணப்படும்.
உடலானது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் என வியத்தமடைந்து காணப்படுகின்றது.
பல்லின வித்தியுண்மையைக் காண்பிக்கும். அதாவது மாவித்தி, நுண்வித்தி என்பன உருவாக்கப்படும்.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ்,உரியம் போன்றவை விருத்தியடைந்து காணப்படும்.
Eg:- செலாஜினெல்லா


விலங்குப் பாகுபாட்டுக்கான பிரமாணங்கள் பூமியில் ஏறத்தாழ 30 Million விலங்கினங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டாலும் அவற்றில் இதுவரை அண்ணளவாக 1 Million விலங்கினங்களே கண்டறியப்பட்டுள்ளன. 1758 இல் வெளியிடப்பட்ட “கரோலஸ் லீனியஸ்” இன் “System Nature” எனும் நூலின் 10ம் பதிப்பின் மூலம் திருத்தமான விலங்கினப்பாகுபாடு அறிமுகமாகியது. தற்காலப் பாகுபாட்டுக்கமைவாக விலங்கு இராச்சியம் (Kingdom Animalia) இரு வகையாகப் பிரிக்கப்படும்.

விலங்கு இராச்சியம் (Kingdom Animalia)
1. முள்ளந்தண்டுளிகள் (Vertibrates) 2. முள்ளந்தண்டிலிகள் (InVertibrates)

முள்ளந்தண்டுளிகள் (Vertibrates) பிரதான இயல்புகள் 1. முண்ணானைச் சூழ முள்ளந்தண்டு என்புகளால் ஆன முள்ளந்தண்டு காணப்
படும். 2. முண்ணானின் முற்பகுதி விருத்தியடைந்து மூளையாகக் காணப்படும். 3. மூளையைச் சுற்றி பாதுகாப்பிற்காக மண்டையோடு காணப்படும். 4. குதத்திற்குப்பின்புறமாக வால் காணப்படும். இவை ஐந்து பிரதான வகுப்புக்களாகப் பிரிக்கப்படும்.
1. Class :- Pisces வகுப்பு :- பிசெஸ் 2. Class :- Amphibia வகுப்பு :- அம்பிபியா 3. Class :- Reptelia வகுப்பு :- ரெப்ரீலியா 4. Class :- Aves வகுப்பு :- ஆவேஸ் 5. Class :- Mammalia வகுப்பு :- மமேலியா

வகுப்பு :- பிசெஸ்( Pisces) மீன்கள் யாவும் இவ்வகுப்பில் உள்ளடக்கப்படும். (முள்மீன்களும், கசியிழையமீன்களும்) 1. இவை நீர் வாழ்வன ஆகும். கடல்நீர் or நன்னீரில் வாழும். 2. உடலானது தலை, முண்டம், வால் எனும் பகுதிகளைக் கொண்டது. 3. அருவிக்கோட்டுருவான உடலமைப்புடையது. 4. பொதுவான சுவாச அங்கம் பூக்களாகும். 5. தோல் செதில்களைக் கொண்டது. 6. இரு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 7. இடப்பெயர்ச்சி அங்கமாகச் செட்டைகள் காணப்படும். மற்றைய எல்லாமுள்ளந்தண்டுளிகளும் மீன்களிலிருந்தே கூர்ப்படைந்ததாக சான்றுகள் கூறுகின்றது.
Eg:- சுறா, திருக்கை, சூரை, சாளை, கடற்குதிரை

வகுப்பு :- அம்பிபியா(Amphibia) ஈரூடகவாழிகள்/ உபயவாழிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும். 1. வாழ்க்கை வட்டத்தின் ஆரம்பத்தை நீரிலும் நிறையுடலிப் பருவத்தை நீரிலு
ம், நிலத்திலும் கழிக்கக் கூடிய விலங்குகள் ஆகும். 2. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 3. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன. 4. மெல்லிய, ஈரலிப்பான தோல் காணப்படும்.. 5. சோடியான அவயவங்கள் காணப்படும். கால் விரல்களிடையே விரலிடை 
மென்சவ்வு உள்ளது. 6. மூன்று அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 7. தோல், நுரையீரல், வாய்க்குழி என்பன மூலம் சுவாசிக்கும். 8. முட்டையிட்டு இனப்பெருக்கும். இனப்பெருக்கம் நீரில் நடைபெறும்.
Eg:- தவளை, தேரை, சலமன்டர்

வகுப்பு :- ரெப்ரீலியா (Reptelia) ஊர்ந்து செல்லும் விலங்குகளான நகருயிர்கள் இதிலடங்கும். 1. பொதுவாக தரைவாழ் விலங்குகளாகும். 2. சூழல் வெப்பநிலைக் குருதியுடையன. 3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 4. சோடியான அவயவங்கள் காணப்படும். (நான்கு கால்கள்) ஆனால் பாம்புகள் 
கால்களைக் கொண்டிராது. 5. உலர்ந்த, தடித்த செதில் கொண்ட தோல் காணப்படும். 6. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 7. இதயம் இரு சோணையறைகளையும் முற்றாகப் பிரிக்கப்படாத இரு இதய 
அறைகளையும் கொண்டது. 8. முட்டையிட்டு இனப்பெருக்கும்.
Eg:- முதலை, பாம்பு, பச்சோந்தி

வகுப்பு :- ஆவேஸ் (Aves) பறவைகள் யாவும் இதிலடங்கும் 1. வான் வாழ்க்கைக்கு இசைவாக்கமடைந்த விலங்குகள். சில தரை, நீர் ஆகிய
வற்றில் வாழும். 2. உடல் அருவிக்கோட்டு உருவுடையது. 3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. 4. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி) 5. சோடியான அவயவங்கள் காணப்படும். முன்சோடி சிறகுகளாகத் திரிபடைந்
து காணப்படும். 6. பொதுவாகப் பறக்கக்கூடியன. 7. பாரமற்ற என்புகள் காணப்படும். 8. உடல் இறக்கைகளால் மூடப்பட்டிருக்கும். 9. வாயானது அலகுகளாக நீட்டப்பட்டிருக்கும். பற்கள் இல்லை. 10. இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. 11. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 12. முட்டையிட்டு அடைகாத்து இனம் பெருக்கும்.
Eg:- தாரா, கழுகு, கோழி

வகுப்பு :- மமேலியா(Mammalia) விருத்தியடைந்த முள்ளந்தண்டுளிகளாகும். முலையூட்டிகள்(பாலூட்டிகள்) எனப் பொதுவாக அழைக்கப்படும். 1. தரை, நீர் ஆகிய வாழிடங்களில் காணப்படும். 2. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி) 3. தோல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். 4. இரண்டு சோடி விருத்தியடைந்த அவயவங்கள் காணப்படும். 5. வாழும் சூழலுக்கேற்ப நடந்தோ, நீந்தியோ, பறந்தோ இடம்பெயரும். 6. பிரிமென்றகடு காணப்படும். 7. வாய்க்குழியில் பற்கள் காணப்படும். 8. நான்கு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும். 9. நுரையீரல் மூலம் சுவாசிக்கும். 10. குட்டியீன்று பால் கொடுக்கும்.
Eg:- சிம்பான்சி, வெளவால், திமிங்கிலம், மனிதன்

Wednesday, March 6, 2013

அங்கிகளின் பிரதான உயிர்ச் செயற்பாடுகள்


சிறப்பான மட்டத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறப் பங்களிப்புச் செய்யும் காரணிகள்

ஒளித்தொகுப்பு பற்றிய எண்ணக்கரு
ஞாயிற்றுத்தொகுதி 5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
புவி 4.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
முதலாவது உயிரினமாகிய “இரசாயனப் பிறபோசனிப் Bacteria”  3.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது அதிலிருந்தே ஏனைய உயிரங்கிகள் கூர்ப்படைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையே உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கை விளக்குகின்றது.
அக் கொள்கை பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


உயிர் இரசாயனக் கூர்ப்புக்கொள்கை
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள சூரியனுடன் பெரிய வால்வெள்ளி/ விண்கல் மோதியதன் விளைவாகவே இக் கோள்மண்டலங்கள் உருவாகியதாகவும் அதில் ஒன்று தான் புவியெனக் கூறப்படுகிறது.
புவி உருவாகிய வேளையில் உயர் வெப்பநிலையும் N2, H2, CO2, H2O, H2S, NH3   ஆகிய எளிய வாயு மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலம் காணப்பட்டதெனவும் பின்பு படிப்படியாக புவி குளிர்ச்சியடைந்து நீராவி ஒடுங்கி மழையாகப் பெய்ததன் மூலம் அந்நீர் புவியின் பள்ளமான பகுதிகளில் தேங்கியதன் விளைவாக சமூத்திரங்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது வளிமண்டலத்தில் காணப்பட்ட இவ்வாயுக்கள் மழைநீரில் கரைந்து அவை சமுத்திரத்தின் ஆழமான பகுதிகளில் படிந்து “அழுக்குப்படலம்(Concervate)” உருவாக்கப்பட்டது.
அத்துடன் மழைபெய்கின்ற வேளையில் ஏற்பட்ட மின்னலினால்/ மின்னிறக்கங்கள் காரணமாக இவ் அழுக்குப்படலத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை சேதனச்சேர்வைகளை உருவாக்கி அதிலிருந்து முதலாவது உயிரினம் தோன்றியதென நம்பப்படுகின்றது.

சேதனச்சேர்வைகள் (Organic Compounds)
இவை நான்கு வகைப்படும்.
  1. காபோவைதரேற்று (Carbohydrates)
  2. இலிப்பிட்டு (Lipids)
  3. புரதம் (Protein)
  4. நியூக்கிளிக்கமிலங்கள் (Nucleic Acids)
Note :-

  சில விரிவாக்கங்கள்
    1. DNA  - Deoxy Ribose Nucleic Acid
    2.  RNA - Ribo Nucleic Acid
    3.  ATP  - Adenosine Tri Phosphate
    4.  ADP - Adenosine Di Phosphate
    5.  NAD     - Nicotinamide Adenine Di nucleotide
    6.  FAD - Flavin Adenine Di nucleotide
மேலும் 12 Million ஆண்டுகளின் பின்பு அங்கிகளில் பச்சையத்தினுள் குளோரோபில் எனும் சேர்வை உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒளிச்சக்தியை/ ஞாயிற்றுச்சக்தியை உறிஞ்சி அவ்வங்கிகள் ஒளித்தொகுப்புச் செயன்முறையில் ஈடுபட்டன.

ஒளித்தொகுப்பு (Photosynthesis)
ஒளித்தொகுப்பின் முக்கியத்துவம்
இற்றைக்கு 2.7 Billion ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் சில இரசாயனத் தொகுப்பு Bacteria கள் இன்றும் கூட தனிக்கல அங்கிகளாக வாழ்ந்து வருகின்றன. இவற்றிலிருந்தே பல்கல அங்கிகள் தோன்றி ஒளித்தொகுப்பு செய்யக்கூடிய உயர் தாவரங்களாக வியத்தமடைந்தன.
ஒளித்தொகுப்பின்போது ஒட்சிசன் வெளிவிடப்படுகின்றது. இவ் ஒட்சிசன் காரணமாக காற்றுச்சுவாச அங்கிகள் வாழ்வதற்கேற்ற சூழலொன்று தாவரங்களினால் உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாகிய ஒட்சிசனில் இருந்து ஓசோன்படை உருவாகி உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழியூதாக் கதிர்கள் புவியை வந்தடைவது தடுக்கப்பட்டது.
அத்துடன் பச்சைவீட்டு வாயுவான காபனீரொட்சைட்டு தாவரங்களால் பயன்படுத்தப்பட்டதால் அங்கிகள் வாழக்கூடிய சூழலாக புவி மாற்றமடைந்தது.
உணவுச்சங்கிலியின் உற்பத்தியாக்கிகளான தாவரங்களே ஒளித்தொகுப்புச் செயன்முறையின் மூலம் ஞாயிற்றுச்சக்தியை புவியினுள் பதிக்கின்றன. எனவே தாவரங்கள் தோன்றியிருக்காவிடின் இப்புவியில் மனிதனோää ஏனைய அங்கிகளோ தோன்றியிருக்க முடியாது.

ஒளித்தொகுப்பு விளைபொருட்கள்

பச்சையத்தைக் கொண்ட தாவரங்கள் ஒளி உள்ளபோது நீர், காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதன உணவைத்தொகுக்கும் அனுசேபச் செயன்முறை ஒளித்தொகுப்பு எனப்படும்.

ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகள்
இவை இரு வகைப்படும்
  1. அகக் காரணிகள்
  2. புறக்காரணிகள்

ஒளித்தொகுப்புக்கு அவசியமான அகக் காரணிகள்
  1. பச்சையவுருமணியில் உள்ள குளோரோபில்

ஒளித்தொகுப்புக்கு அவசியமான புறக்காரணிகள்
  1. சூரியஒளி
  2. நீர்
  3. காபனீரொட்சைட்டு

ஒளித்தொகுப்பின் விளைபொருட்கள்
  1. ஒட்சிசன்
  2. குளுக்கோசு

ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகளை இனங்காணல்

ஒளித்தொகுப்புக்கு பச்சையம் அவசியமெனக்காட்டல்
பன்னிறக் குறோட்டன் இலை/ பச்சையமற்ற நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது.
அத் தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இலையில் பச்சையமுள்ள பகுதிகள்  I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. பச்சையமற்ற பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு பச்சையம் அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்.

ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு அவசியமெனக்காட்டல்
மேலே படத்தில் காட்டியவாறு பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர் தொகுதி A இனுள் காபனீரொட்சைட்டை உறுஞ்சுவதற்கு KOH கரைசலும் தொகுதி B இனுள் நீரும் இடப்பட்டது.
தொகுதி A, தொகுதி B  தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தொகுதி B  இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. தொகுதி A இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு/ ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு  அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்

ஒளித்தொகுப்புக்கு ஒளி அவசியமெனக்காட்டல்
பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்தது பின்னர் அத்தாவரத்தின் இலையொன்றை தெரிவு செய்து அதன் ஒரு பகுதியைக் கறுப்புத் தாளினால் நன்கு மூடுக. அப்பகுதி மீது வழுக்கிகளை இருபுறமும் வைத்து இறப்பர்ப்பட்டியினால் கவனமாகச் சுற்றிக் கட்டுக. பின் அவ்விலையினை 4-5 மணித்தியாலத்திற்கு சூரிய ஒளிபடக் கூடியவாறு வைக்க
இலை பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒளிபடவிடப்பட்ட  இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. ஒளிபடவிடப்படாத இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு சூரிய ஒளி அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்
தாவரங்களின் நிலவுகைக்குக் கொண்டுசெல்லற் செயன்முறை பங்களிப்புச் செய்யும் முறையை ஆராய்தல்
தாவரத்தின் வேரினால் அகத்துறிஞ்சப்படும் நீர், கனியுப்புக்கள் காழ் இழையத்தினூடாக தாவரத்தின் ஏனைய பகுதிகள் முழுவதற்கும் கடத்தப்படுகின்றது.
இக்கடத்தல்/ கொண்டு செல்லல் இரு வகைப்படும்.
  1. உயிர்ப்பான கடத்தல்
  2. உயிர்ப்பற்ற கடத்தல்

உயிர்ப்பான கடத்தல்(Active Transport)
அனுசேபத்தின் போது உருவாக்கப்படும் ATP சக்தியைப்பயன்படுத்தி பதார்த்தப்பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பான கடத்தல் ஆகும்
Eg:- தாவரங்களில் கனியுப்பு அயன்கள் உயிர்ப்பான கடத்தல் மூலமே அகத்துறிஞ்சப்படுகின்றன.

உயிர்ப்பற்ற கடத்தல்(Passive Transport)
அனுசேப சக்தி விரயமின்றி / ATP சக்தியைப்பயன்படுத்தாது பதார்த்தப் பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பற்ற கடத்தல் ஆகும்

இது பின்வரும் முறைகளில் நிகழும்
  1. பரவல் (Diffusion)
  2. பிரசாரணம் (Osmosis)
  3. திணிவுப்பாய்ச்சல் (Mass flow)
  4. உட்கொள்கை (Inhibition)
  5. ஆவியாதல் (Evaporation)

பரவல் (Diffusion

துணிக்கைகள் செறிவு கூடிய இடத்தில் இருந்து செறிவு குறைவான இடத்திற்கு அசைதல் பரவல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் கலச்சுவரினூடாக நீர் கடத்தப்படுதல்

பிரசாரணம் (Osmosis)

பங்கீடுபுகவிடும் மென்சவ்வினூடாக நீர் மூலக்கூறுகளின் செறிவு கூடிய இடத்திலிருந்து நீர் மூலக்கூறுகளின் செறிவு குறைந்த இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் கொண்டு செல்லப்படுதல் பிரசாரணம் எனப்படும்.
Eg:- மண்ணிலிருந்து தாவரங்களின் வேரினூடாக நீர் அகத்துறிஞ்சப்படுதல்.
திணிவுப்பாய்ச்சல் (Mass flow)

இரு இடங்களுக்கு இடயிலான அமுக்க வேறுபாடு காரணமாக கரைசல் நிலையில் பதார்த்தங்கள் திணிவாக எடுத்துச் செல்லப்படல் திணிவுப்பாய்ச்சல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் உரியக்கலங்கள், கலச்சுவரினூடாக பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படல்.
உட்கொள்கை (Inhibition)

செறிவுப்படித்திறன் வழியே நீர் விருப்புள்ள மூலக்கூறுகள் நீரைப் புறத்துறுஞ்சுவதன் மூலம் நீர் அசைதல் உட்கொள்கை எனப்படும்.
Eg:- வித்துக்கள் நீரில் இடப்படும்போது அவை வீங்குதல் உட்கொள்கை ஆகும்

ஆவியாதல் (Evaporation)

இலைநடுவிழையக் கலங்களிலுள்ள நீர் ஆவிநிலையில் கலத்தடைவெளி களினுள்  வெளியேறுதல் ஆவியாதல் எனப்படும்.
Eg:-  தாவர மேற்பரப்பினூடாக நீரின் ஆவியுர்ப்பு
        இலைவாய்களினூடாக நீரின் ஆவியுர்ப்பு

இளம் தாவரவேரின் கட்டமைப்பு
பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத்தாவரங்கள், இருவித்திலைத்தாவரங்கள் என இருவகைப்படும்.
இவ்விருவகையினதும் வேர்களின் அமைப்பில் வேறுபாடு காணப்படு கின்றது.

ஒருவித்திலைத் தாவரவேரின் அமைப்பு

                     ஒருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டு அமைப்பு

இருவித்திலைத் தாவரவேரின் அமைப்பு
ஒருவித்திலைத்தாவரவேரின் அமைப்புக்கும் இருவித்திலைத்தாவரவேரின் அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள்

வேர்மயிர்கள்(Root Hairs)
இருவித்தாவரத்தின் மேற்பரப்பிலுள்ள தனிக்கலப்படையில் உள்ள சில கலங்கள் வெளி நீட்டங்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் வேர்மயிர்கள் எனப்படும்.

நீர், கனியுப்புக்கள் ஆகியவற்றை அகத்துறிஞ்சுவதற்கென வேரில் காணப்படும் இசைவாக்கங்கள்
1. இரு வித்திலைத்தாவரங்களில் வேர்கள் கிளைத்துக் காணப்படல்.
2. ஒரு வித்திலைத்தாவரங்களில் அனேக எண்ணிக்கையான வேர்கள் 
    காணப்படல்.
3. வேர்மயிர்கள் காணப்படல்
4. வேர்மயிரின் மேற்பரப்பு மெல்லியதாகக் காணப்படல்
சாற்றேற்றம்

கனியுப்புக்கள் கரைந்துள்ள நீர் தாவரவேர்களிலிருந்து உயரமான பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்படலே சாற்றேற்றம் எனப்படும்.
பொதுவாக தாவரவேர்களிலிருந்து இலைகள் வரை காழினூடாக நீரும் அதில் கரைந்துள்ள பதார்த்தங்களும் செல்லும். காழினூடாக இந்நீர் தொடர்ச்சியாக அறுபடாது, மேல் நோக்கிச் செல்லும். இந்நீர் நிரலில் வளிக் குமிழிகள் காணப்படுவதில்லை. நீர்நிரல் தொடர்ச்சியாகக் காணப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன.
  1. பிணைவு விசை
  2. ஒட்டற்பண்பு விசை
இது போன்றே ஆவியுயிர்ப்பின் மூலம் தாவர இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலையின் இழுவை காரணமாக காழினூடாக நீர் மேலேறும். இது ஆவியுர்ப்பு இழுவிசை எனப்படும்.
மேலும் தாவரங்களின் காழ்கலன்களினூடாக நீரும் அதிற் கரைந்துள்ள கனியுப்புக்களும் மேல்நோக்கி ஏறுவதற்கு வேரினால் தள்ளுகை பிரயோகிக்கப்படும். இது வேரமுக்கம் எனப்படும்.
வேரமுக்கம் மூலமாக தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 18 மீற்றர் ஆகும். எனினும் உயரமான தாவரங்களின் பகுதிகளிற்கு பிரதானமாக ஆவியுர்ப்பு இழுவிசை மூலமே நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 50 - 60 மீற்றர் ஆகும்.
இவை தவிர பூண்டுத்தாவரங்களில் (புற்களில்) நீரைக்கொண்டு செல்லலில்  மயிர்த்துளை ஏற்றம் எனும் இழுவிசையும் தொழிற்படுகின்றது. எனினும் அது 10 - 15 சென்ரி மீற்றர் வரையுமே தொழிற்படக்கூடியது.

ஆவியுயிர்ப்பு(Transpiration)
தாவரங்களின் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து நீர் ஆவிநிலையில் வெளியேறுதல/ இழக்கப்படல் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
  1. இலைவாய் ஆவியுயிர்ப்பு
  2. புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
  3. பட்டைவாய் ஆவியுர்ப்பு.

இலைவாய் ஆவியுயிர்ப்பு
இது மொத்த ஆவியுர்ப்பில் அதிகளவில் நடைபெறும். (80-90%)
இவ் ஆவியுயிர்ப்பு இலைகளிலுள்ள இலைவாய்களினூடாகவே அதிகளவில் நிகழ்கின்றது. இதனால் இது இலைவாய் ஆவியுயிர்ப்பு எனப்படும்.

புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
இது மொத்த ஆவியுர்ப்பில் 10-20% நிகழும்.
இவ் ஆவியுயிர்ப்பு தாவரத்தின் பூக்கள், காய்கள் போன்றவற்றின் புறத்தோலினூடாக நீர் ஆவி நிலையில் வெளியேறுதல் இது புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு எனப்படும்.
வரள்நிலத் தாவரங்களில் தண்டு நன்கு தடித்திருப்பதனால் இவ் ஆவியுயிர்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.

பட்டைவாய் ஆவியுர்ப்பு
இவ் ஆவியுயிர்ப்பு தடித்த வைரம் செறிந்த தாவரப்பகுதியில் உள்ள பட்டைவாய்களினூடாக நீர் ஆவியாக இழக்கப்படல் பட்டைவாய் ஆவியுர்ப்பு எனப்படும்.
இது புறக்கத்தக்கது.



                           இருவித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுமுகம்

Note:- தாவர இலைகளில் இருந்து அதிகளவான நீர் அவியாக வெளியேறு கின்றது.

தாவரங்களின் நிலவுகைக்கு ஆவியுர்ப்பு பங்களிப்புச் செய்யும் முறையைக் கண்டறிதல்
வாடிய நிலையிலுள்ள தாவரத்திற்கு நீர் ஊற்றும்போது அது மீண்டும் பழைய நிலையை அடைகிறது என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். எனவே தாவரங்கள் வாடுவதற்குக் காரணம் நீர்ப்பற்றாக்குறையே காரணமாகும்.

தாவரங்களில் நீர்ப்பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகின்றது எனக்காட்டல்
ஒரு சட்டித்தாவரத்தின் ஒரு சிறு கிளையை பொலித்தீன் உறையினால் மூடிக்கட்டி சில மணி  நேரத்தின் பின்பு அவதானித்தபோது அப் பொலித்தீன் உறையின் உட்புறத்தில் நீர்த்துளிகள் படிந்து காணப்படும். அந்நீர்த்துளிகள் நீரற்ற செப்புசல்பேற்றை நீலநிறமாக மாற்றும் இதிலிருந்து தாவரங்களி லிருந்து நீர் வெளியேறுகின்றது என முடிவு செய்யலாம். எனினும் இந்நீர் வெளியேற்றம் கண்களுக்குப் புலப்படமாட்டாது. எனவே நீரானது ஆவி நிலையில் வெளியேறியுள்ளது. அந்நீர் குளிர்ச்சியடைந்து பொலித்தீன் உறையின் உட்சுவரில் நீர்த்துளிகளாகப் படியும்.

ஆவியுர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
நீர் ஆவிநிலையில் தாவரங்களிலிருந்து வெளியேறுதலே ஆவியுயிர்ப்பு ஆகும்.எனவே ஆவியாதலைப் பாதிக்கும் எல்லாக் காரணிகளும் ஆவியுர்ப்பையும் பாதிக்கும்.

ஆவியுர்ப்பில் பங்களிப்புச் செய்யும் சூழற்காரணிகள்
  1. சூழல் வெப்பநிலை
  2. வளிமண்டல ஈரப்பதன்
  3. காற்றின் வேகம்
  4. ஒளிச்செறிவு
  5. மண்ணீரின் அளவு

சூழல் வெப்பநிலை
வெப்பநிலை அதிகரிக்கும் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.

வளிமண்டல ஈரப்பதன்
வளிமண்டல ஈரப்பதன், வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவில் தங்கியுள்ளது. எனவே வளியிலுள்ள நீராவியினளவு குறையும் போது வளிமண்டல ஈரப்பதன் குறையும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.

காற்றின் வேகம்
காற்றின் மூலமாக இலையைச் சூழ்ந்து காணப்படும் நீராவி எடுத்துச் செல்லப்படும். எனவே காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.

ஒளிச்செறிவு
ஒளியுள்ளபோது இலைவாய்கள் திறந்திருக்கும். ஆகவே வெப்பநிலையும் அதிகமாகக் காணப்படும் எனவே ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.

மண்ணீரின் அளவு
கிடைக்கத்தக்க மண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது தாவரங்களில் அகத்துறிஞசப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.


ஆவியுர்ப்பு விகிதத்தை அளவிடுவதற்கு கனோங்கின் உறிஞ்சன்மானியைப் பயன்படுத்துதல்
ஆவியுயிர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை சோதிப்பதற்கு கனொங்கின் உறிஞ்சன் மானி பயன்படுத்தப்படுகின்றது.
உறிஞ்சன்மானியையும் தாவரத்துடன் சேர்ந்த கிளையையும் நீரினுள் அமிழ்த்தி நீரினுள் வைத்து கிளையை வெட்டி படத்திற்காட்டியவாறு பொருத்திக் கொள்ள வேண்டும். தண்டினுள் வளிக் குமிழிகள் செல்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நீரினுள் வைத்து வெட்டப்படும். பின்னர் கிளை பொருத்தப்பட்ட பகுதிகள் வசலீன் கொண்டு வளியிறுக்கம் செய்யப்படும்.
மேலும் உறிஞ்சன்மானியின் மயிர்த்துளைக் குழாயை நுனியை சற்று உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் வளிக்குமிழியொன்றை அதன் திறந்த முனையினூடாக உட்செல்ல அனுமதிக்கப்படும்.
இலைகளிலிருந்து ஆவியுயிர்ப்புமூலம் நீர் வெளியேறும்போது வளிக்குமிழிää கிளை பொருத்தப்பட்டு உள்ள திசையை நோக்கி அசையும்ää குழாயில் அளவிடை குறிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் வளிக்குமிழி அசைந்த தூரத்தை அளந்து கொள்க அத்துடன் அதற்கு எடுத்த நேரத்தை அளந்து கொள்க.
இதிலிருந்து பல்வேறு சூழல் நிலமைகளில் வைத்து ஆவியுயிர்ப்பு வீதத்தை துணிந்து கொள்ள முடியும்.

ஆவியுர்ப்பைக் குறைப்பதற்காக தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்
நீர்ப்பற்றாக்குறையான சூழலில் வாழும் தாவரங்கள் மேலதீக நீரிழப்பைத் தடுப்பதற்காக பின்வரும் இசைவாக்கங்களைக் காட்டுகின்றன.
1. இலைகள் உதிர்தல், முட்களாக திரிபடைதல், தண்டு சதைப்பற்றாதல்
 Eg:- நாகதாளி, கள்ளி
2. குழிகளில் அமிழ்ந்துள்ள இலைவாய்கள் காணப்படல்.
 Eg:- இராவணன் மீசை, அலரி
3. இலைகளின் மீது மயிர்கள் காணப்படல்
 Eg:- பூசணி, சூரியகாந்தி
4. தடித்த புறத்தோல் காணப்படல்
 Eg:- அலரி, ஆலமரம்
5. இலைகள் சுருண்டு காணப்படல்
  Eg:- நெல், புல்
6. குறிப்பிட்ட காலத்தில் இலைகள் உதிருதல் (இலையுதிர்வு)
  Eg:-இறப்பர், தேக்கு

தாவரங்களில் ஆவியுர்ப்பின் அனுகூலங்கள்
1. தாவரங்களின் உயரமான பகுதிகளுக்கு பதார்த்தங்கள் கடத்தப்படல்.
2. இலைகளைச் சுற்றி நீராவி காணப்படுவதனால் சூரிய வெப்பத்தினால் 
    இலைகளுக்கு பாதிப்பு  ஏற்படாது.
3. தாவரங்கள் குளிர்ச்சியடையும்.
4. தாவரங்களால் அதிகளவு நீர் உறிஞ்சப்படல்.
5. தாவரத்தினுள் கனியுப்புக்களை பரம்பலடையச் செய்தல்.

தாவரங்களில் ஆவியுர்ப்பின் பிரதிகூலங்கள்
1. தாவரங்களில் நீரிழப்பு ஏற்படும்.
2. தாவரங்கள் வாடுவதால் ஒளித்தொகுப்புப் பாதிக்கப்படல்.

கசிவு 
அதிகாலை வேளையில் புற் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும்ää சேம்புத் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும் திரவத்துளிகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை இத்தாவர உட்பகுதியிலிருந்து நீர் செல்துளைகளினூடாக வெளியேறிய நீர்த்துளிகள் கசிவு ஆகும். இவை பின்வரும் கூறுகளைக் கொண்டன.
அதிகளவு நீர் + கரையப்பதார்த்தங்கள் + கனியுப்புக்கள்
இது வேரமுக்கத்தின் ஒரு நேரடி விளைவாகும். ஆவியுர்ப்பிற்கு எதிரான நிபந்தனைகளிலேயே இது நடைபெறும். ஏனெனில் மண்ணீர் அடக்கமும் சாரீரப்பதனும் உயர்வாக இருக்கும் போதே பெரும்பாலான தாவரங்களில் வேரமுக்கம் ஏற்படும் இச்சந்தர்ப்பங்களில் தாவரத்தினுள் அயன்கள் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் உட்செல்லும் இவ்வயன்கள் வேரின் காழினுள் கரையச் செறிவை அதிகரிப்பதனால் அதன் நீரழுத்தம் மண்ணீர் அழுத்தத்தை விடக்குறையும். எனவே தாவரத்தினுள் நீர் உட்செல்லும் இதன் காரணமாக ஏற்படும் அமுக்கமே வேரமுக்கமாகும்.

மனிதனின் உடற்தொழிற்பாட்டுக்குக் குருதி பங்களிப்புச் செய்யும் முறையை ஆராய்தல்

•  சாதாரண மனிதனின் உடலில் 5.5 லீற்றர் குருதி காணப்படும். எனினும்
   அது மனித உடல் நிறைக்கேற்ப மாறுபடலாம்.
•  எமது உடலில் வெட்டுக்காயம் அல்லது உராய்வு ஏற்படும் போது குருதி
   வெளியேறும். பொதுவாக எமது உடலில் இருந்து ஒரு துளி குருதி
   வெளியேறினால் அது மீண்டும் உருவாக 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.
•  உடலில் குருதி ஆனது குருதிக் கலன்களினுள் காணப்படுகின்றது.
உடலில் இருந்து குருதியைப் பெறும்போது அது ஏகவினத்தன்மை கொண்ட பாய்மமாகக் காணப்பட்ட போதிலும் அதனைப் பரிசோதனைக்குழாயில் இட்டு வைத்ததும் அது கடும் சென்நிற ஜெலி போன்ற திண்மக் கூறாகவும் வேறாகிக் காணப்படும்.
குருதிப்பூச்சைக் கொண்ட வழுக்கியொன்றை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிப்பின் குருதியில் உள்ள கூறுகளை தெளிவாக அவதானிக்க முடியும்.
குருதிப்பாய்மத்தில் பல எண்ணிக்கையான கலங்கள் இருப்பதைக் காணலாம். அவற்றுள் அனேக கலங்கள் செந்நிறமானவை. அவற்றைத் தவிர பல அளவுகளினாலான வேறு கலங்களையும் அவதானிக்கலாம்.
குருதியில் காணப்படும் செங்குழியங்களை அகற்றி வெண்குழியங்களை தெளிவாக அவதானிப்பதற்கு ஒரு குருதித்துளியை மூடித்துண்டால்(Cover Slip) மூடி சுற்றிவர ஜதான அசற்றிக்கமிலத் துளிகளை இட்டு அவதானிக்கும்போது இது சாத்தியமாகும்.

செங்குருதிக்கலங்கள்/ செங்குழியங்கள் (Red Blood Cells/ Erythrocytes)
• 7.5µm விடடமுடைய கலங்கள்.
• சிறிய/ கருவற்ற/ ஈமோகுளோபின் எனும் செந்நிறப்பொருளைக் கொண்ட
   கலங்கள்.
• இரு குழிவான வட்டத்தட்டுருவான கலங்கள். இவை தனியாகவோ அல்லது
   தொகுதிகளாகவோ குருதிப்பாய்மத்தில் இயங்கிய வண்ணம் காணப்படும்.

• இக்கலங்களின் விட்டம் குருதிமயிர்க்குழாய்களின் உள்விட்டத்தை ஒத்துக்
   காணப்படுவதனால் குருதிமயிர்க்குழாய்களினூடாக மெதுவாகவே
  அசைகின்றன.
• இதன் காரணமாக வாயுப்பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுகின்றது.
• 1ml3 குருதியில் 5,000,000 செங்குழியங்கள் உள்ளன.
• செங்குழியங்களிலுள்ள ஈமோகுளோபின் காரணமாக குருதிக்குச் செந்நிறம்
  கிடைக்கின்றது. இது இரும்பைக்கொண்ட Haematin எனும்
  குருதிநிறப்பொருளையும், Globin எனப்படும் புரதத்தையும் கொண்டு
  காணப்படும்.
• செங்குழியங்கள் மனிதனின் இளம்பருவத்தில் ஈரலிலும், மண்ணீரலிலும்
  உருவாக்கப்படுகின்றன. எனினும் நிலையுடலி நிலையில் செவ்வென்பு
  மச்சையில் உருவாக்கப்படுகின்றன.
• செங்குழியங்கள் 4மாதம்/ 120 நாட்கள் வாழ்தகவுடையவை.
• இவை தங்களின் வாழ்தகவின் பின்னர் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றில்
  அழிக்கப்படுகின்றன.

செங்குழியத்தின் தொழில்கள்
1.ஒட்சிசன்செறிவு கூடிய இடத்திலிருந்து ஒட்சிசன்செறிவு குறைந்த
   இடத்திற்கு ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபின் வடிவில் கடத்துதல்.
   இதன்போது குருதியின் செந்நிறம் அதிகரித்துக் காணப்படும்.
2.சுவாச மேற்பரப்பிலிருந்து செல்லும் குருதி, கலங்களை அடைந்தவுடன்
   ஒட்சிஈமோகுளோபின் பிரிகையடைந்து ஒட்சிசன் வெளிவிடப்படும்.
   இவ்வாறு வெளிவிடப்படும் ஒட்சிசன் கலங்களினுள் பரவலடையும்.

வெண்குருதிக் கலங்கள்/ வெண்குழியங்கள் (White Blood Cells/ Leucocytes)